குறள் 952 — குடிமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 193 · ஸ்கேன் 226 · மூலமும் சான்றும்