பொருட்பால் · குடியியல் · குடிமை

குறள் 958குடிமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின் கண் ஐயப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 194 · ஸ்கேன் 227 · மூலமும் சான்றும்