பொருட்பால் · நட்பியல்
95. மருந்து
குறள் 941–950
- குறள் 941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.
- குறள் 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியதற்றது போற்றி உணின்.
- குறள் 943அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
- குறள் 944அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.
- குறள் 945மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபா டில்லை உயிர்க்கு.
- குறள் 946இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.
- குறள் 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.
- குறள் 948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.
- குறள் 949உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.
- குறள் 950உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்து.