பொருட்பால் · நட்பியல் · மருந்து

குறள் 948மருந்து

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்.

மூலம் · அச்சுப் பக்கம் 192 · ஸ்கேன் 225 · மூலமும் சான்றும்