பொருட்பால் · நட்பியல்
94. சூது
குறள் 931–940
- குறள் 931வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
- குறள் 932ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
- குறள் 933உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.
- குறள் 934சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன் றில்.
- குறள் 935கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.
- குறள் 936அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.
- குறள் 937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.
- குறள் 938பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது.
- குறள் 939உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.
- குறள் 940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.