பொருட்பால் · நட்பியல்

93. கள்ளுண்ணாமை

குறள் 921930
  1. குறள் 921
    உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார்.
  2. குறள் 922
    உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்.
  3. குறள் 923
    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி.
  4. குறள் 924
    நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
  5. குறள் 925
    கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்.
  6. குறள் 926
    துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
  7. குறள் 927
    உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
  8. குறள் 928
    களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.
  9. குறள் 929
    களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
  10. குறள் 930
    கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.