குறள் 929 — கள்ளுண்ணாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குடிபோதைக்கு அடிமையாகிவிட்டவனைத் திருந்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக் கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 188 · ஸ்கேன் 221 · மூலமும் சான்றும்