பொருட்பால் · நட்பியல் · சூது

குறள் 938சூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித் துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.

மூலம் · அச்சுப் பக்கம் 190 · ஸ்கேன் 223 · மூலமும் சான்றும்