பொருட்பால் · நட்பியல்
91. பெண்வழிச் சேறல்
குறள் 901–910
- குறள் 901மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது.
- குறள் 902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்.
- குறள் 903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.
- குறள் 904மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று.
- குறள் 905இல்லாளை யஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.
- குறள் 906இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர்.
- குறள் 907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.
- குறள் 908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங் கொழுகு பவர்.
- குறள் 909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ணேவல் செய்வார்கண் இல்.
- குறள் 910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.