பொருட்பால் · நட்பியல் · பெண்வழிச் சேறல்

குறள் 910பெண்வழிச் சேறல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்க மாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 184 · ஸ்கேன் 217 · மூலமும் சான்றும்