பொருட்பால் · நட்பியல் · வரைவின் மகளிர்

குறள் 911வரைவின் மகளிர்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

மூலம் · அச்சுப் பக்கம் 185 · ஸ்கேன் 218 · மூலமும் சான்றும்