பொருட்பால் · நட்பியல்

88. பகைத்திறம் தெரிதல்

குறள் 871880
  1. குறள் 871
    பகையென்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற் றன்று.
  2. குறள் 872
    வில்வேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.
  3. குறள் 873
    ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.
  4. குறள் 874
    பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற் றுலகு.
  5. குறள் 875
    தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.
  6. குறள் 876
    தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.
  7. குறள் 877
    நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.
  8. குறள் 878
    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.
  9. குறள் 879
    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
  10. குறள் 880
    உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்.