குறள் 878 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 178 · ஸ்கேன் 211 · மூலமும் சான்றும்