பொருட்பால் · படையியல்
78. படைச்செருக்கு
குறள் 771–780
- குறள் 771என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்.
- குறள் 772கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.
- குறள் 773பேராண்மை என்ப தறுகணொன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.
- குறள் 774கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்.
- குறள் 775விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
- குறள் 776விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்குந்தன் நாளை எடுத்து.
- குறள் 777சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
- குறள் 778உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினுஞ்சீர் குன்றல் இலர்.
- குறள் 779இழைத்த திகவாமைச் சாவாரை யாரேபிழைத்த தொறுக்கிற் பவர்.
- குறள் 780புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோட் டக்க துடைத்து.