பொருட்பால் · படையியல் · படைச்செருக்கு

குறள் 780படைச்செருக்கு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோட் டக்க துடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

மூலம் · அச்சுப் பக்கம் 158 · ஸ்கேன் 191 · மூலமும் சான்றும்