பொருட்பால் · படையியல் · படைச்செருக்கு

குறள் 772படைச்செருக்கு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

மூலம் · அச்சுப் பக்கம் 157 · ஸ்கேன் 190 · மூலமும் சான்றும்