பொருட்பால் · அரணியல்
74. நாடு
குறள் 731–740
- குறள் 731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வருஞ் சேர்வது நாடு.
- குறள் 732பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு.
- குறள் 733பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கிறையொருங்கு நேர்வது நாடு.
- குறள் 734உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு.
- குறள் 735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு.
- குறள் 736கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை.
- குறள் 737இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற் குறுப்பு.
- குறள் 738பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
- குறள் 739நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.
- குறள் 740ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.