அறத்துப்பால் · இல்லறவியல்

7. மக்கட்பேறு

குறள் 6170
  1. குறள் 61
    பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற.
  2. குறள் 62
    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.
  3. குறள் 63
    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்.
  4. குறள் 64
    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.
  5. குறள் 65
    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
  6. குறள் 66
    குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.
  7. குறள் 67
    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.
  8. குறள் 68
    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.
  9. குறள் 69
    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்.
  10. குறள் 70
    மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்னோற்றான் கொல்லெனும் சொல்.