அறத்துப்பால் · இல்லறவியல் · மக்கட்பேறு

குறள் 69மக்கட்பேறு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 14 · ஸ்கேன் 47 · மூலமும் சான்றும்