குறள் 68 — மக்கட்பேறு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 14 · ஸ்கேன் 47 · மூலமும் சான்றும்