அறத்துப்பால் · இல்லறவியல் · மக்கட்பேறு

குறள் 65மக்கட்பேறு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 13 · ஸ்கேன் 46 · மூலமும் சான்றும்