பொருட்பால் · அமைச்சியல்
65. சொல்வன்மை
குறள் 641–650
- குறள் 641நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்யாநலத் துள்ளதூஉம் அன்று.
- குறள் 642ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
- குறள் 643கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.
- குறள் 644திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங் கில்.
- குறள் 645சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
- குறள் 646வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள்.
- குறள் 647சொல்லவல்லன் சோர்விலன் அஞ்சா னவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது.
- குறள் 648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்.
- குறள் 649பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்.
- குறள் 650இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றதுணர விரித்துரையா தார்.