பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மை

குறள் 643சொல்வன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கேட்டோரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 131 · ஸ்கேன் 164 · மூலமும் சான்றும்