பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மை

குறள் 642சொல்வன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 131 · ஸ்கேன் 164 · மூலமும் சான்றும்