பொருட்பால் · அரசியல்

63. இடுக்கண் அழியாமை

குறள் 621630
  1. குறள் 621
    இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வ தஃதொப்ப தில்.
  2. குறள் 622
    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்.
  3. குறள் 623
    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்.
  4. குறள் 624
    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
  5. குறள் 625
    அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.
  6. குறள் 626
    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்றோம்புதல் தேற்றா தவர்.
  7. குறள் 627
    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதா மேல்.
  8. குறள் 628
    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்ப முறுதல் இலன்.
  9. குறள் 629
    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்ப முறுதல் இலன்.
  10. குறள் 630
    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு.