பொருட்பால் · அரசியல்

62. ஆள்வினையுடைமை

குறள் 611620
  1. குறள் 611
    அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.
  2. குறள் 612
    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.
  3. குறள் 613
    தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
  4. குறள் 614
    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.
  5. குறள் 615
    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.
  6. குறள் 616
    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.
  7. குறள் 617
    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.
  8. குறள் 618
    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்தாள்வினை இன்மை பழி.
  9. குறள் 619
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.
  10. குறள் 620
    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்று பவர்.