பொருட்பால் · அரசியல்
61. மடியின்மை
குறள் 601–610
- குறள் 601குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.
- குறள் 602மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டும் பவர்.
- குறள் 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியுந் தன்னினு முந்து.
- குறள் 604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.
- குறள் 605நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.
- குறள் 606படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது.
- குறள் 607இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்.
- குறள் 608மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.
- குறள் 609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.
- குறள் 610மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு.