பொருட்பால் · அரசியல்
60. ஊக்கமுடைமை
குறள் 591–600
- குறள் 591உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்உடைய துடையரோ மற்று.
- குறள் 592உள்ள முடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.
- குறள் 593ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்ஒருவந்தங் கைத்துடை யார்.
- குறள் 594ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.
- குறள் 595வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனைய துயர்வு.
- குறள் 596உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
- குறள் 597சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.
- குறள் 598உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.
- குறள் 599பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.
- குறள் 600உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறு.