பொருட்பால் · அரசியல்

59. ஒற்றாடல்

குறள் 581590
  1. குறள் 581
    ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்.
  2. குறள் 582
    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்.
  3. குறள் 583
    ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்த தில்.
  4. குறள் 584
    வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்கனைவரையும் ஆராய்வ தொற்று.
  5. குறள் 585
    கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று.
  6. குறள் 586
    துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்தென்செயினுஞ் சோர்வில தொற்று.
  7. குறள் 587
    மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பா டில்லதே ஒற்று.
  8. குறள் 588
    ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
  9. குறள் 589
    ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்.
  10. குறள் 590
    சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்புறப்படுத்தான் ஆகும் மறை.