பொருட்பால் · அரசியல்

41. கல்லாமை

குறள் 401410
  1. குறள் 401
    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.
  2. குறள் 402
    கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.
  3. குறள் 403
    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.
  4. குறள் 404
    கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்.
  5. குறள் 405
    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.
  6. குறள் 406
    உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.
  7. குறள் 407
    நுண்மாண் நுழைபுல மில்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.
  8. குறள் 408
    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.
  9. குறள் 409
    மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு.
  10. குறள் 410
    விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்கற்றாரோ டேனை யவர்.