பொருட்பால் · அரசியல்
40. கல்வி
குறள் 391–400
- குறள் 391கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.
- குறள் 392எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
- குறள் 393கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.
- குறள் 394உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.
- குறள் 395உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.
- குறள் 396தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.
- குறள் 397யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.
- குறள் 398ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து.
- குறள் 399தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.
- குறள் 400கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.