பொருட்பால் · அரசியல்

39. இறைமாட்சி

குறள் 381390
  1. குறள் 381
    படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறு.
  2. குறள் 382
    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தற் கியல்பு.
  3. குறள் 383
    தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு.
  4. குறள் 384
    அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமான முடைய தரசு.
  5. குறள் 385
    இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்தவகுத்தலும் வல்ல தரசு.
  6. குறள் 386
    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்.
  7. குறள் 387
    இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.
  8. குறள் 388
    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்.
  9. குறள் 389
    செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகு.
  10. குறள் 390
    கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.