அறத்துப்பால் · ஊழியல்

38. ஊழ்

குறள் 371380
  1. குறள் 371
    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடி.
  2. குறள் 372
    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.
  3. குறள் 373
    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.
  4. குறள் 374
    இருவே றுலகத் தியற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.
  5. குறள் 375
    நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.
  6. குறள் 376
    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.
  7. குறள் 377
    வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடிதொகுத்தார்க்குந் துய்த்த லரிது.
  8. குறள் 378
    துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.
  9. குறள் 379
    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.
  10. குறள் 380
    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.