அறத்துப்பால் · துறவறவியல்
37. அவாவறுத்தல்
குறள் 361–370
- குறள் 361அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து.
- குறள் 362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.
- குறள் 363வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில்.
- குறள் 364தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.
- குறள் 365அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்.
- குறள் 366அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா.
- குறள் 367அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்.
- குறள் 368அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம்: துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.
- குறள் 369இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்.
- குறள் 370ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்.