அறத்துப்பால் · துறவறவியல் · அவாவறுத்தல்

குறள் 367அவாவறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 74 · ஸ்கேன் 107 · மூலமும் சான்றும்