அறத்துப்பால் · துறவறவியல்

36. மெய்யுணர்தல்

குறள் 351360
  1. குறள் 351
    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு.
  2. குறள் 352
    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.
  3. குறள் 353
    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வான நணிய துடைத்து.
  4. குறள் 354
    ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு.
  5. குறள் 355
    எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
  6. குறள் 356
    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.
  7. குறள் 357
    ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
  8. குறள் 358
    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவு.
  9. குறள் 359
    சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்.
  10. குறள் 360
    காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடு நோய்.