அறத்துப்பால் · துறவறவியல்

35. துறவு

குறள் 341350
  1. குறள் 341
    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.
  2. குறள் 342
    வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பல.
  3. குறள் 343
    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
  4. குறள் 344
    இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.
  5. குறள் 345
    மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க் குடம்பும் மிகை.
  6. குறள் 346
    யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்.
  7. குறள் 347
    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு.
  8. குறள் 348
    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்.
  9. குறள் 349
    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்.
  10. குறள் 350
    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.