அறத்துப்பால் · துறவறவியல்
34. நிலையாமை
குறள் 331–340
- குறள் 331நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.
- குறள் 332கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று.
- குறள் 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.
- குறள் 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்வாள துணர்வார்ப் பெறின்.
- குறள் 335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்.
- குறள் 336நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு.
- குறள் 337ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுபகோடியு மல்ல பல.
- குறள் 338குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போ டுயிரிடை நட்பு.
- குறள் 339உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
- குறள் 340புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சி லிருந்த உயிர்க்கு.