அறத்துப்பால் · துறவறவியல்
33. கொல்லாமை
குறள் 321–330
- குறள் 321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.
- குறள் 322பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
- குறள் 323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.
- குறள் 324நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறி.
- குறள் 325நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.
- குறள் 326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்று.
- குறள் 327தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதின்னுயிர் நீக்கும் வினை.
- குறள் 328நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.
- குறள் 329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.
- குறள் 330உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.