பொருட்பால் · அரசியல் · கல்லாமை

குறள் 406கல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 84 · ஸ்கேன் 117 · மூலமும் சான்றும்