பொருட்பால் · அரசியல் · கல்லாமை

குறள் 407கல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நுண்மாண் நுழைபுல மில்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண்பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 84 · ஸ்கேன் 117 · மூலமும் சான்றும்