பொருட்பால் · அரசியல்
42. கேள்வி
குறள் 411–420
- குறள் 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச் செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை.
- குறள் 412செவிக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.
- குறள் 413செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பார் நிலத்து.
- குறள் 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கொற்கத்தின் ஊற்றாந் துணை.
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோ லற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
- குறள் 416எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.
- குறள் 417பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.
- குறள் 418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
- குறள் 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராத லரிது.
- குறள் 420செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்.