அறத்துப்பால் · பாயிரவியல்

4. அறன் வலியுறுத்தல்

குறள் 3140
  1. குறள் 31
    சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.
  2. குறள் 32
    அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.
  3. குறள் 33
    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்.
  4. குறள் 34
    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற.
  5. குறள் 35
    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்.
  6. குறள் 36
    அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.
  7. குறள் 37
    அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
  8. குறள் 38
    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்.
  9. குறள் 39
    அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல.
  10. குறள் 40
    செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.