அறத்துப்பால் · பாயிரவியல்

3. நீத்தார் பெருமை

குறள் 2130
  1. குறள் 21
    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.
  2. குறள் 22
    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
  3. குறள் 23
    இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகு.
  4. குறள் 24
    உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
  5. குறள் 25
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.
  6. குறள் 26
    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
  7. குறள் 27
    சுவையொளி ஊறோசை நாற்றமென றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு.
  8. குறள் 28
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.
  9. குறள் 29
    குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது.
  10. குறள் 30
    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.