அறத்துப்பால் · பாயிரவியல்
2. வான் சிறப்பு
குறள் 11–20
- குறள் 11வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
- குறள் 12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை.
- குறள் 13விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் றுடற்றும் பசி.
- குறள் 14ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்வாரி வளங்குன்றிக் கால்.
- குறள் 15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.
- குறள் 16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது.
- குறள் 17நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.
- குறள் 18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
- குறள் 19தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்.
- குறள் 20நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு.