அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்பு

குறள் 15வான் சிறப்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 3 · ஸ்கேன் 36 · மூலமும் சான்றும்