அறத்துப்பால் · பாயிரவியல்

1. வழிபாடு

குறள் 110
  1. குறள் 1
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
  2. குறள் 2
    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.
  3. குறள் 3
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.
  4. குறள் 4
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.
  5. குறள் 5
    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
  6. குறள் 6
    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.
  7. குறள் 7
    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.
  8. குறள் 8
    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.
  9. குறள் 9
    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.
  10. குறள் 10
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.