குறள் 17 — வான் சிறப்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
மூலம் · அச்சுப் பக்கம் 4 · ஸ்கேன் 37 · மூலமும் சான்றும்