குறள் 24 — நீத்தார் பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 5 · ஸ்கேன் 38 · மூலமும் சான்றும்