அறத்துப்பால் · இல்லறவியல்

12. நடுவு நிலைமை

குறள் 111120
  1. குறள் 111
    தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்பாற்பட் டொழுகப் பெறின்.
  2. குறள் 112
    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்து.
  3. குறள் 113
    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.
  4. குறள் 114
    தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்.
  5. குறள் 115
    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.
  6. குறள் 116
    கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
  7. குறள் 117
    கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
  8. குறள் 118
    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க் கணி.
  9. குறள் 119
    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.
  10. குறள் 120
    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.